Skip to main content

Posts

மணியம் மாஸ்டர்

வழமையான யாழ்ப்பாணத்துக் காணொளி ஒன்று. தென்மராட்சி வயல் காட்டுப்பக்கம் ஒரு ஐயாவைப் பேட்டி எடுக்கிறார்கள். நரை விழுந்த தோற்றத்தோடு, நெற்றியில் பட்டைத் திரு நீறும் நம் ஊருக்கேயான மென் நீல வண்ண சேர்ட்டும் சாறமும் அணிந்தபடி சக நண்பர்களோடு வயலில் அவர் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். நேர்காணல் எடுப்பவர் அவரிடம் எத்தனை ஆண்டுகளாக வயல் வேலை செய்கிறீர்கள் என்று கேட்க, ஐயா சொல்கிறார். எனக்கு எழுபத்தொரு வயது. அம்பது வரியமா நாங்கள் வயலுக்கதான் நிக்கிறம். அப்ப வயல்தான் மெயினா செய்யிறனீங்களா? நாங்க டீச்சர். இப்ப ரிட்டயர் ஆயிட்டம். ஆனால் எப்பவுமே வயல்தான். எந்த ஸ்கூலில படிப்பிச்சனிங்கள் ஐயா? நாங்கள் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கொலிஜில படிப்பிச்சனாங்கள். எனக்கு உடல் உடனேயே கிறுகிறுத்தது. இது எங்கட மணியம் மாஸ்டர் அல்லவா? ***** பரி. யோவானின் ஒரு சில misfits வாத்திமார்களில் முதன்மையானவர் இந்த மணியம் மாஸ்டர். அதனாலேயே எனக்கும் அவரை மிகவும் பிடிக்கும். மீசாலை ஒரு C90 மோட்டார் சைக்கிளில் கொஞ்சம் லேட்டாகத்தான் தினமும் அவர் பாடசாலைக்கு வருவார். நீண்ட தூர மோட்டர் சைக்கிள் பயணத்தால் அவருடைய கால்கள் எல்லாம் புழுதி பட...

மழை நாளில் 'என் கொல்லைப்புறத்துக் காதலிகள்'

ஒரு மாதத்துக்கு முன்னர் நண்பன் ஒருவன் தன் வீட்டில் பெய்த மழையைக் காணொளி எடுத்துப் பகிர்ந்திருந்தான். நான் பிறந்து வளர்ந்த ஊரான தின்னவேலியில் பெய்த மழை அது. மல்லிகைப் பந்தல், வாழை, செவ்வரத்தை, நெல்லி, பூங்கன்றுகள், இடையே நாய்க்கூடு எனச் சூழ்ந்திருந்த அந்த மிக அழகான வீட்டு முற்றத்தில் மழை கொட்டிக்கொண்டிருந்தது. தின்னவேலி மழை எப்போதுமே அண்டாவைக் கவிழ்த்துக்கொட்டுவதுபோலத்தான் பெய்யும். நான் அன்று அவனுக்கு இப்படி ஒரு கருத்து இட்டேன். வெள்ளம் தேங்கி வீடு கசியாதவரைக்கும் தின்னவேலியின் மழை மிக அழகுதான். ஏன் அப்படிச் சொன்னேனோ தெரியாது. ஆனால் இதனைச் சொல்லிய சில வாரங்களிலேயே தீவு முழுதும் மழையும் வெள்ளமும் நிலச்சரிவும் பெருங் கோரத்தாண்டவத்தை ஆடிவிட்டன. மழை நம் வீட்டுக்குள் நுழையாதவரைக்கும்தான் அழகு. அப்புறம் அது ஒரு கொடிய அரக்கியாகிவிடுகிறது. சிரங்கு. முட்டு. கக்கூஸ் அடைப்பு. நுளம்பு. காயாத உடுப்பு. மின் வெட்டு. நிலமெல்லாம் கசிந்து சகதி ஆவது. இவை எல்லாமே சிறு வெள்ளத்துக்கே வந்து சேரக்கூடிய துன்பங்கள். நிலம் சரிந்து மொத்த வீடுமே அமுங்குவதும் குழந்தைகள் உள்ள வாகனங்கள் அடித்துப்போவதும் பெரு வெள்ளத்த...

படலை பொட்காஸ்ட்

சில வருடங்களாகவே பொட்காஸ்ட் தொடர் ஒன்றை ஆரம்பிக்கவேண்டும் என்றொரு ஆர்வம் உள்ளூற ஊறிக்கொண்டிருந்தது. அது நான் தொடர்ச்சியாகக் கேட்டுப் பயனடைந்துகொண்டிருக்கும் சில பொட்காஸ்டுகளின் பாதிப்பால் ஏற்பட்ட ஒன்று. The History of Literature, Paris Review, The New Yorker Fiction, The New Yorker Writer’s Voice, Not Stupid, The Minefield, If You’re Listening, Ladies We Need to Talk என்று பல பொட்காஸ்ட் தொடர்களின் ஆதர்ச இரசிகன் நான். இந்த பொட்காஸ்டுகள் அனைத்துமே ஆழமான விசயங்களையும் அன்றாட விசயங்களையும் மிக இயல்பாகவும் முன்முடிவுகள் இல்லாமலும் அலசுபவை. கேட்கும்தோறும் புதியவற்றை நமக்கு அறிமுகப்படுத்துபவை. பெரும்பாலானவற்றுக்குக் காணொளிகளும் இல்லை. வெறுமனே ஒலி மாத்திரம்தான். நடைப்பயிற்சியின்போதும் நீண்ட தூரப் பயணங்களின்போதும் காதுகளில் ஒலிக்கவிட்டால் நேரம் கரைவதே தெரியாது. பல சமயங்களில் புதிய அத்தியாயங்களைக் கேட்பதற்காகவே நடைப்பயிற்சிக்குப் போன சம்பவங்களும் உண்டு. அத்தனை அலாதியான அனுபவத்தையும் தேடலையும் கொடுப்பவை இவை. இவ்வாறான பொட்காஸ்டுகளை செய்வதற்கு முன்னர் பெருந்தேடலும் தயார்படுத்தலும் தேவை என்று தோன்றி...

ஆறிடும். ஆறாது.

சில வாரங்களுக்கு முன்னர் எனக்கு மிக நெருக்கமான அக்கா ஒருவர் ஒரு வார்த்தை சொன்னார். அது என்ன வார்த்தை என்பதோ சொல்லப்பட்ட சூழலோ அவ்வளவு முக்கியமில்லை. ஆனால் அது என் ஆழ் மனதை மிகவும் பாதித்துவிட்டது. அவர் அப்படியொன்றும் மோசமாக எதையும் சொல்லவில்லை. அது சாதாரணமாகக் கடந்துபோகவேண்டிய ஒன்றுதான். ஆனால் என் நுண்ணுணர்வை அது தாக்கிவிட்டது. பிறரிடம் கடமைப்படுவது என்பது எனக்குக் கொல்லக்கொண்டுபோவதுபோல. அதனால் மனம் சஞ்சலத்தோடு அலைந்தது. அந்த மன அங்கலாய்ப்பு அர்த்தமற்றது என்று புத்தி எனக்குப் பாடம் புகட்டியது. ஆனால் என் மனதினால் அதனை விட்டுத்தள்ளமுடியவில்லை. நாள் முழுதும் அது புலம்பிக்கொண்டேயிருந்தது. அடுத்த நாளே, சொல்வழி கேட்கமாட்டாயா என்று புத்தி என் மனதைக் குட்டி அடக்கியதால் மனம் கூண்டுக்குள் பதுங்கிய நாய்க்குட்டியாட்டம் ஒடுங்கிவிட்டது. ஆனால் இரு வாரங்கள் கழித்து, புத்தி வேலைக்குப் போயிருந்த சமயம் மனம் கூண்டுக்குள்ளிருந்து மறுபடியும் வெளிவந்து வேலையைக் காட்டிவிட்டது. ஏனென்று தெரியவில்லை. சாதாரண விசயம்தான். சனியன்போல அலைக்கழிந்தது. சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது என்று ஒரு பாட்டு இருக்கு. கன்னி மனத...

உகண்டாவின் ஒன்பது நாட்கள் - பாகம் 11 - நைல் எனும் பாலூட்டும் தாய்

இது புகண்டா இனக்குழுக்களிடையே நிலவும் ஒரு நாட்டார் கதை. ஒரு கிராமத்திலே மட்பானைகளை செய்யும் குயவர் தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஒரு மகன் இருந்தான். ஏனைய சிறுவர்களைப்போலன்றி கொஞ்சம் விட்டேற்றியாக, தானும் தன்பாடுமாகத்தான் அவன் திரிவான். ஒருவர் வித்தியாசமாக இருந்தால் அவரை எள்ளி நகையாடுவது ஒன்றும் மனிதர்களுக்குப் புதிதல்லவே. இந்தச் சிறுவனையும் அவன் பிறந்ததிலிருந்தே ஊரில் அவனை எல்லோரும் பழித்துவந்தார்கள். அவனது தாய்கூட தன் பிள்ளை மற்றவர்களைப்போல இல்லையே என்று வருந்தினாள். அவனும் ஒரு கட்டத்தில் விரக்தியடைந்து வீட்டை விட்டே வெளியேறுகிறான். காட்டில் அலைகிறான். வழியில் காணும் விலங்குகளிடம் அவன் தன்னைப்பற்றிச் சொல்லவும், அவையும், நீ வேலை செய்வதில்லை, நன்றியுடையவனாய் இல்லை, மக்களோடு பழகுவதில்லை என்று ஒவ்வொரு காரணங்களாய்ச் சொல்லி அவனை முட்டாள் என்று விளிக்கின்றன. இவற்றையெல்லாம் கேட்டு அவனது மனம் மேலும் சஞ்சலப்பட்டது. அப்போதுதான் அவன் ஒரு முயலைக் காண்கிறான். முயல் அவனை அரவணைத்து ஆறுதல் சொல்கிறது. தன் வீட்டுக்கு அவனை அழைத்துச்சென்று தான் சேகரித்து வைத்திருந்த பருப்புகளைத் தின்னக்கொடுத்...

உகண்டாவின் ஒன்பது நாட்கள் - பாகம் 10 - உன்மத்தம் ஆகுதடி

வழியில் நைல் நதி குறுக்கிட்டது. இந்தப் பக்கம் புகண்டா காடும் அந்தப் பக்கம் சவான்னா புல்வெளியும் பரவிக்கிடக்க, நடுவே நதி கடல்போல வியாபித்திருந்தது. நாம் பாலத்தைக் கடக்கும்போது சூரியன் காடுகளிடையே தலை தூக்க ஆரம்பித்திருந்தான். மொத்த ஆறுமே ஒரு வண்ணக்குழம்புபோல நகர்ந்துகொண்டிருந்தது. அதன் இரு புறங்களிலும் நீருக்குள்ளிருந்து தலை தூக்கியிருந்த நீர் யானைகளின் வழுக்கல் நெற்றிகளில் சூரியக் கதிர்கள் பட்டுத் தெறித்து மின்னின. ஆங்காங்கே சில முதலைகளையும் மௌலீமா காட்டினாள். நாங்கள் வாகனத்தைப் பாலத்தருகே நிறுத்தி இறங்கினோம். பொன்னிற மேனியுடன் நதியும் அதனுள்ளே முதலைகளும் பறவைகளும் நீர் யானைகளும் என்று அழகும் ஆபத்தும் ஒரு சேர்ந்த இயற்கை அது. நதி ஒரு நகரும் காடு. அதைப் பார்த்துக்கொண்டேயிருந்தால் நேரமாவதையே உணரமுடியாது. மௌலீமாதான் வா போகலாம் என்று வலிந்து அழைத்துப்போனாள். இப்பயணம் முழுதும் ஏற்பட்ட உணர்வு இது. ஒன்றில் மனம் தரித்துவிட்டால் பின்னர் அங்கிருந்து நகரவே அது இடம் கொடுக்காது. ஆனால் அதேசமயம் அடுத்ததையும் பார்த்தே தீரவேண்டும் என்று அது அடம் பிடிக்கவும் செய்யும். ஒரு பெரு நாவலின் அற்புத வரிகளில் இரச...

உகண்டாவின் ஒன்பது நாட்கள் - பாகம் 9 - காதலின் துயரம்

அன்றுதான் காட்டுத் தர்பாரைப் பார்க்கப்போவதற்கு நாம் திட்டமிட்டிருந்தோம். முந்தைய தினமே கம்பாலாவிலிருந்து புறப்பட்டு நான்கு மணி நேரம் பயணம் செய்து இந்த மச்சிசன் நீர்வீழ்ச்சியை அண்டிய வனப்பகுதிக்கு வந்திருந்தோம். ஜெகனின் உள்ளூர் நண்பர் ஒருவர்தான் இந்தச் சுற்றுலாவை ஒழுங்குபடுத்தியிருந்தார். இரண்டு சபாரி வாகனங்கள். நம் வாகனத்துக்கு சோபியா ஓட்டுநர். லௌமி, சுகி, அவர்களுடைய மகன்கள் இருவரும் பயணம் செய்த வாகனத்துக்கு வின்சன் ஓட்டுநர். மௌலீமா ஒரு பொதுவான வழிகாட்டி. எல்லோருமே வனவிலங்குகள் சம்பந்தமான உயர்கல்வி கற்றவர்கள். இருபதுகளில் இருக்கும் இளைஞர்கள். நாம் தங்கி நிற்கும் மேர்ச்சிசன் காட்டுப்பகுதியைப் பற்றிய தகவல்களை எல்லாம் அவர்கள் பயணம் நெடுகவும் சொல்லிக்கொண்டே வருவார்கள். காட்டில் அலைந்து களைத்திருக்கும்போது சாப்பிடலாம் என்று வழியில் ஒரு சந்தையில் நிறுத்தி வாழைப்பழச் சீப்புகளையும் அன்னாசிகளையும் அவர்கள் வாங்கினார்கள். ஆனால் மச்சிசன் காட்டின் நுழைவு வாயிலில் அனுமதி பெறுவதற்காக நாம் இறங்கி நின்ற வேளையில் பபூன் ஒன்று வாகனத்தின் யன்னல் வழியே உள்ளே நுழைந்து வாழைப்பழச் சீப்புகளை எடுத்துக்கொண்டு ஓட...