Skip to main content

தேடித்தேடி தேய்ந்தேனே!!


சிறுவயதில் உங்களுக்கு அந்த பெண்ணை பிடித்திருக்கும்! ஒரு பதினைந்து வயது என்று வையுங்கள். அப்போது அவளுக்கு தெரியாமலேயே அவளை நோட்டம் விட்டிருப்பீர்கள். கணக்கே எடுத்திருக்கமாட்டாள்.  அவள் போகும் இடம் எல்லாம் பின் தொடர்ந்து, அத்தனை இளையராஜா டூயட்களையும் அவளோடு வயற்காட்டிலோ இல்லை இண்டோர் செட்டிலோ பாடிப்பார்த்து இருப்பீர்கள். ஒரு மழைக்கால இரவில் “புதுவெள்ளை மழை” பாட்டை ரேடியோவில் போட்டுவிட்டு அவளின் கண்கள் இரண்டையும் உங்கள் கைகளால் பொத்திக்கொண்டு கூட்டிச்சென்று காஷ்மீர் பனிமலைகள் காட்டி இருப்பீர்கள். அவளும் சொக்கிப்போய் சுத்தி சுத்தி பார்க்க, கண்ணாடி சில்லுகளாய் இசை சிதறி கிறங்கடிக்கும். ஆனால் நிஜத்தில் அவள் நேரில் வந்தால் அப்போது தான் பனைமரத்தில் எத்தனை நொங்குகள் இருக்கின்றன என்று எண்ணியிருப்பீர்கள். சரி, காலம் ஓடிவிட்டது, இப்போது வளர்ந்து பெரியவன் ஆகி விட்டீர்கள். ஒருநாள் திடீரென்று அவள் எதிரே வந்து நிற்கிறாள். ஒரு உறவுக்கார திருமணம் என்று வைய்யுங்களேன்! நீங்கள் நினைத்த கலரிலேயே சேலை, நீங்கள் நினைத்ததுபோலவே சிரிக்கிறாள். உங்களை ஞாபகம் வைத்து பேசுகிறாள்.  ரோஜா மதுபாலா போல “சிறு பறவை நீயானால் உன் வானம் நானே” என்று பாடுகிறாள். எப்படி இருக்கும் உங்களுக்கு? 


அப்படி இருந்தது இந்த பாடல்களை நான் தேடிக்கண்டுபிடிக்கும் போது.  ஆம்  இந்தவாரம் “உ.. ஊ.. ம ப த ப மா” வில் அதிகம் கேட்கப்படாத, கேட்கக்கிடைக்காத ஆனால் கேட்கும் போது “ச்சே இவ்வளவு காலமும் மிஸ் பண்ணிட்டோமே” என்று எண்ணத்தூண்டும் சில பாடல்களை பகிரப்போகிறேன். இப்படியான பாடல்கள் ஆளாளுக்கு மாறுபடும், இளமைக்கால காதலிகள் போல. ஆனால் பலர் ஒருவரை காதலிப்பது ஒன்றும் புதிதில்லையே. நீங்களும் இந்த பாடல்களை காதலித்து இருப்பீர்கள். நிச்சயம்! சரி பாடல்களுக்கு போவோம்.


இந்த பாடல், ஆண்டுக்கணக்கில் நான் தேடிய பாடல். அப்போது எல்லாம் tape recorder தான். இந்த பாடலை நான் தேடாத இடம் இல்லை. எந்த கடையிலும் இல்லை. சில வருடங்களுக்கு முன்னர் தான் யாரோ ஒரு புண்ணியவான் இன்டர்நெட்டில் ஏத்தி இருந்தான். மெய்யாலுமே அவள் வந்து நின்ற மாதிரி இருந்தது. இப்போது youtube இலும் வந்து விட்டது. நல்ல பாடல் எப்போதும் கேட்கப்படுகிறது தான். அகத்தியன் இசை என்று நினைக்கிறேன். உன்னி, மனோ, சித்ரா, சுஜாதா என்று ஒரு கூட்டமே பாடியிருப்பார்கள். A terrific song!



வெள்ளி கொலுசு ஜதி போடுதே!

இதை youtube இல் ஏத்தியவன் உண்மையிலேயே ஒரு பக்கா ரசிகனாக இருக்கவேண்டும். “பொன் மோதிரம்” என்ற சொல் வரும் இடத்தில் ஒரு மோதிரத்தின் படமே போட்டிருப்பான்!


அடுத்த பாடல், தேவாவின் இசையில் வந்த கோல்மால் திரைப்பட பாடல். ஓரளவுக்கு பிரபலமான பாடல் தான். ஆனால் சிலவருடங்களுக்கு முன்னர் தேடும்போது கிடைக்கவில்லை. இன்னமும் யூடுயூபில் கூட இல்லை. இப்போது சேர்த்துவிட்டேன். சரணத்தில் எல்லாம் ஹரிகரனின் குரல் குழையும் பாருங்கள். பிடித்தால் நிச்சயம் எழுதுங்கள். இசையை கேட்பதும் அதைப்பற்றி பேசுவதும் எப்போதும் சுகமே.


படங்கள் : சயந்தன்



Again தேவா. “அன்பே டயானா” திரைப்படம். தொண்ணூறுகளில் தேவா இருந்த போர்மில் துக்கடா படங்களுக்கெல்லாம் நல்ல இசை வழங்கிக்கொண்டு இருந்த நேரம். இந்த பாடலை எல்லாம் திரையில் பார்த்தால் சகிக்கவேமுடியாது. ஆனால் பாடலின் இசை வேறு எந்த நல்ல பாடலுக்கும் சற்றேனும் குறைந்ததில்லை. “நேற்று வரையிலும் வெறும் வண்ணமாக வாழ்ந்தேன், இன்று காதலால் நான் வானவில்லாய் ஆனேன்” என்ற வரியில் ஹரிகரன் சங்கதி சும்மா சந்திலே சிந்து பாடும். என்ன ஒரு பாடல்! இரவோடு இரவாய் யூடியுபில் எத்திவிட்டேன். கேளுங்கள், கேட்டுவிட்டுச்சொல்லுங்கள். 


படங்கள் : சயந்தன்


அடுத்த பாடல், yet again தேவா. இன்னொரு அல்வா படம். மாப்பிள்ளை கவுண்டர் என்று நினைக்கிறேன். ஆனால் தேவா எந்த பெண்ணைக கண்டாலும் காதலித்துக்கொண்டிருந்த பருவம் அது. கொஞ்சம் “ஆலோலங்கிளி தோப்பிலே” என்ற ராஜா பாடலின் சாயல் சரணத்தில் இருந்தாலும், தேவாவுக்கு இது ஒன்றும் புதுசு இல்லையே!




விஸ்வதுளசி.  சிலவருடங்களுக்கும் முன்னர் வந்த படம். இரண்டு தலைவர்கள் செந்தமிழ்பாட்டுக்குப்பின்னர் இணைந்தது என்று நினைக்கிறேன்.  இயக்குனரை கட்டி வைத்து அடிக்கவேண்டும். அழகான மெட்டுகள் உள்ள பாடல்களை எல்லாம் சின்ன சின்னதாக வெட்டி குதறியிருப்பார். ஒரு பெண் இயக்குனர் என்று நினைக்கிறேன். 

இந்த பாடலின் இறுதியில் வரும் வீணையை பாருங்கள். எப்போதாவது கேட்ட ஞாபகம் இருக்கிறதா? அதே தான். “பூ முடித்து போட்டு வைத்த வட்ட நிலா, புன்னகையில் பாட்டெழுதும் வண்ணபுறா” வில் வரும் சில arrangements தான். தலைவர் பழைய போர்மில் இருக்கிறார் என்பதற்கு அந்த இடமே நல்ல சாட்சி!

எங்கு பிறந்தது?


இந்த பாடல்களையெல்லாம் கேட்கும்போது இந்த ஒரு வரி அடிக்கடி ஞாபகம் வருகிறது.
“கேட்காத கீதம், அதுதானே அழகு கலைஞனின் மனம் அறியும்” 

என்று ஒரு இளையராஜா பாடல் அண்மையில் வந்தது.  சரணத்தில் வரும் வரிகள் அவை. அந்த பாடல் அண்மையில் வந்த ராஜாவின் பாடல்களுக்குள் ஒரு milestone என்று சொல்லலாம். ராஜா ரசிகர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். கண்டுபிடியுங்கள்! கருத்திடுங்கள். கலந்துரையாடுவோம்! 


என்ன? இந்தவார ♫♫ உ.. ஊ.. ம ப த ப மா ♪♪ பிடித்திருக்கிறதா? பிடித்திருந்தால் வாக்களிக்க மறக்காதீர்கள். மீண்டும் அடுத்த செவ்வாயில் வேறு ஒரு மியூசிக்கல் collection உடன் சந்திப்போம்.

தீபாவளி வாழ்த்துக்கள் நண்பர்களே!

Comments

  1. மச்சி அந்த "வெள்ளிக்கொலுசு" பாடல் 1995 இல் வெளிவந்த " பார்வை" படத்தில் இடம்பெற்றது, அன்றைய காலத்தில் நானும் E.சஞ்சீவனும் பார்த்தியும் இந்தப்பாட்டை ஷண் ரெக்கோர்டிங் செண்டரில போய் ரெக்கோர்ட் பண்ணி டேப் தேய தேய கேட்ட பாடல், அண்மையில் நானும் பிriயாவும் கொழும்பில் இருந்து வந்துகொண்டிருந்த போது மீண்டும் மீண்டும்கேட்டுக்கொண்டே வந்த பாடல்.. அருமையா இசை,மிருதங்கம் அட்சர சுத்தம இருக்கும் பாடலுக்கேற்றால் போல..

    ReplyDelete
  2. " திருமலை நாயகனே" பாட்டின் சரணம் ராஜாவின் ஈரமான ரோஜாவே படத்தில் வரும் " அதோ மேக ஊர்வலம் " பாட்டின் சரணமும் கிட்டத்தட்ட ஒன்றாக இருக்கு கேட்டு பாரு, http://www.youtube.com/watch?v=yHAC43c6Prk

    ReplyDelete
  3. அனைத்தும் அருமையான நெஞ்சை விட்டகலாத பாடல்கள்..

    ReplyDelete
  4. நன்றி குஞ்சு ... திருமலை நாயகனே இல் இந்த பாடலின் பாதிப்பும் இருக்கிறது போல ... தேவா தானே ... ஆனாலும் நல்ல பாடல்... வெள்ளி கொலுசு மாதிரி பாடல்கள் ஏன் தான் பிரபலமடையவில்லையோ தெரியாது ...இந்த பதிவு போல !! இசை பற்றிய பதிவுக்கும் அதிகம் வரவேற்பில்லை .. ஏன் என்று தெரியவில்லை ;) ஹ ஹா ஹா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. கக்கூஸ்

                                          நடுச்சாமத்தில கக்கூசுக்கு அவசரமாக வந்துவிட்டால் அது ஒரு மிகப்பெரிய அரசியற் பிரச்சனை. தனியாகப் போகமுடியாது. கூட்டணி வைக்கவேண்டும். செத்துப்போன தாத்தா பின்பத்திக்குள்ளே சுருட்டுப் பிடித்துக்கொண்டு நிப்பார். கிணற்றடியில் பாம்பு பூரான் கிடக்கலாம். ஒரே வழி, பக்கத்தில் நித்திரை கொள்ளும் அம்மாவைத் தட்டி எழுப்புவதுதான். முதல் தட்டிலேயே எழுந்துவிடுவார். “பத்து வயசாயிட்டுது இன்னும் என்னடா பயம்?”