Skip to main content

A Thousand Splendid Suns


1000suns (1)



டெல்லி விமானநிலையத்தில் வாங்கி அங்கேயே வாசிக்க தொடங்கி, மூடி வைக்க முடியாமல், சிங்கப்பூர் விமான நிலையத்தில் taxyக்கு வரிசையில் நிற்கும்போது கூட வாசித்து, டிரைவருக்கு PIE சொல்ல மறந்து, AYE நெரிசலில் திணறும்போது நானும் காபுல் சண்டையில் சிக்கி! வீடு வந்து, இரவிரவாக வாசித்து, அடுத்த நாள் வேலைக்கு லீவு போட்டு, சாப்பாடு தண்ணியில்லாமல் அதுவே கதியென்று கிடந்து, இரவு எட்டு மணிக்கு என் அறைக்கதவை திறந்து கொண்டு வெளியே வந்தால், அக்கா பாவமாய் பார்த்து கேட்டாள்.
“யாரடா அந்த பொண்ணு?”
“பொண்ணு இல்ல அக்கா ….. பொண்ணுங்க!
“The Kite Runner” புகழ் காலித் ஹூசைனின் “A Thousand Splendid Suns” வாசித்தால் புரியும், மரியமும் லைலாவும் உங்கள் இதயத்தின் இடது வலது என்று இடம்பிடித்து இருப்பார்கள். சம்பந்தமேயில்லாவிட்டாலும் அகிலனின் பாவை விளக்கில் வரும் தேவகியை மரியத்தோடும், கௌரியை லைலாவுடனும் மனம் ஒப்பிட்டுக்கொண்டு இருந்தது. வாசிக்கும் போது ஒரே முகங்கள் வந்துகொண்டு இருந்தன. என்ன ஒன்று ரஷீத் என்ற அரக்கனை தணிகாசலத்தோடு ஒப்பிடவேமுடியாது!

ஆப்கான் கதை தான். மரியம், ஒரு பணக்கார தியேட்டர் முதலாளியின் சட்டவிரோதமான மனைவியின்(?) மகள். உருது மொழியில் ஹராமி என்று அசிங்கமாக அழைப்பார்கள். நீங்கள் ஆப்கானில் பெண்களுக்கு என்னென்ன கொடுமைகள் எல்லாம் கேள்விப்பட்டு இருப்பீர்களோ, அதை போல பத்து மடங்கை அனுபவிக்கிறாள். இன்னொருத்தி லைலா. உயர் குடி, ஆங்கிலம் படித்த ஆப்கான் பெற்றோருக்கு பிறந்தவள். கூட படிக்கும் இளைஞனை காதலிக்கிறாள். ஒரு கட்டத்தில் ஆப்கான் அரசியல் போர் மற்றும் குடும்ப சூழ்நிலைகளால் இருவருமே ரஷீதை மணக்கவேண்டிய சூழல். அங்கே ஆரம்பிக்கிறது Family violence இன் உச்சம். இதற்குள் லைலா கர்ப்பம், குழந்தை என்று பல சிக்கல்கள். வெளியாலே ஆப்கானுக்கே உரித்தான ஆக்கிரமிப்புகள். இவற்றின் முடிச்சு தான் “A Thousand Splendid Suns”. நான் அறிமுகப்படுத்தும் சில புத்தகங்களை ஓரிருவர் வாங்கி வாசித்தும் இருக்கிறார்கள்! என்பதால் ரங்கனுக்காக, கதையை இதற்கு மேலே வளர்க்கவில்லை!

வாசிக்கும்போது ஆப்கான் பிராந்திய அரசியல் ஓரளவுக்கு பிடிபடுகிறது. அங்கே ஏன் ஒரு குழப்பமான ஆயுத குழுக்கள், முகாஜுதீன், தலிபான், சோவியத் ஆக்கிரமிப்பு, ஐரோப்பிய ஆக்கிரமிப்பு, ஈரான், பாகிஸ்தான், இப்போது அமெரிக்கா, இதற்குள் ஜனநாயகம் என்ற கழுதை வேறு! எல்லாவற்றையும் அழுத்தமாக சொல்லும் a must, must, must read! Hats off to Khaled Hosseini!

இப்படியான அரசியல் சூழ்நிலையில், சமாந்தரமாக, குடும்ப வன்முறைகளையும் எடுத்து ஆள, அதையும் மிகவும் அயர்ச்சி வராமல் தர, தைரியம் வேண்டும். Khaled க்கு இருக்கிறது. மரியத்தின் மீது வரும் ஒரு பரிதாபம், லைலா மீது வரும் ஒரு மெல்லிய காதல், அவள் பெண் மீது வரும் பாசம், இதை வைத்து அடித்து ஆடி இருக்கிறார் எழுத்தாளர். அரங்கேற்ற வேளையில் குறிப்பிட்டது போல காலித் ஹோசைன் போன்று எங்கள் வாழ்க்கையை, ஈழத்து வாழக்கையை, எங்களுக்காக இல்லாமல், ஏனைய இனங்களுக்காக எழுதவேண்டும் என்பது என்னுடைய கனவு. ஆங்கிலத்தில் திக்கி திணறி கொஞ்ச நாள் எழுதியத்துக்கு காரணமும் அதுவே. ஆனால் ஆணியே புடுங்கமுடியாது என்பது ஆரம்பித்த பின்னர் தான் தெரிந்தது! Khaled Hosseini ஆப்கான் வாழ்க்கையை ஆங்கிலத்தில் எழுதும்போது, அதை ஆப்கான் சமுதாயமே அமெரிக்காவில் ப்ரோமொட் பண்ணி, வாசிக்க வைத்து … அமெரிக்காவுக்கும் அந்த தேவை இருந்தது உண்மை தான் என்றாலும் அந்த இரண்டு புள்ளிகளும் சந்தித்தது இல்லையா?

அரசியல் என்பது, கூட்டமைப்போடு இணைந்து/எதிர்த்து/தள்ளிநின்று/தட்டிக்கொடுத்து/வியாழமாற்றம் எழுதும் விஷயம் மட்டுமே கிடையாது. இலக்கியத்தில் செய்யும் அரசியல், பொருளாதாரத்தில் செய்யும் அரசியல், தொழில்நுட்பத்தில் செய்யும் அரசியல் இது எல்லாமே ஒரு “Nation Building Process” இன் தூண்கள் தான். அதை புரிந்து கொண்டாட என்றைக்கு நாங்கள் துணிகிறோமோ அப்போது தான் அட்லீஸ்ட் இரண்டு ஆணியாவது ட்ரை பண்ணலாம் அப்பிரசிண்டுகளா!

Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. கக்கூஸ்

                                          நடுச்சாமத்தில கக்கூசுக்கு அவசரமாக வந்துவிட்டால் அது ஒரு மிகப்பெரிய அரசியற் பிரச்சனை. தனியாகப் போகமுடியாது. கூட்டணி வைக்கவேண்டும். செத்துப்போன தாத்தா பின்பத்திக்குள்ளே சுருட்டுப் பிடித்துக்கொண்டு நிப்பார். கிணற்றடியில் பாம்பு பூரான் கிடக்கலாம். ஒரே வழி, பக்கத்தில் நித்திரை கொள்ளும் அம்மாவைத் தட்டி எழுப்புவதுதான். முதல் தட்டிலேயே எழுந்துவிடுவார். “பத்து வயசாயிட்டுது இன்னும் என்னடா பயம்?”