Skip to main content

காற்று வெளியிடை



எவ்வாறு மழையினை செம்புலம் ஏற்றதோ அதுபோல தலைவனை நம் சங்க இலக்கியத் தலைவியும் ஏற்றுக்கொள்கிறாள். நிலத்தைப் பெண்ணுக்கும் நீரை ஆணுக்கும் உருவகிப்பதில் ஓராயிரம் அர்த்தங்கள் உண்டு. நிலம் என்பது இங்கே மருதத்தை குறிப்பதாம்.

நீர் ஒரு நிலைப்பட்டதல்ல. இருக்குமிடத்தோடு அது தன் குணத்தையும் மாற்றிக்கொள்ளும். பனியாய் உறைந்து மலை உச்சியில் கிடக்கையில் அழகாய் அது பார்ப்பவரை ஈர்த்துக்கொள்ளும். நெருங்கிப்போனால் கணத்தில் நம்மையும் அது உறைய வைத்துவிடும். சரிவும் பொழிவும் பனியின் இயல்புகளாம். நீர் வானில் முகிலாய்த் திரண்டு நிலத்தின் பொறுமையையும் சோதிக்கும். அழும். கெஞ்சும். நிலத்தை அடைவதற்காக மழையாகவோ, ஆறாகவோ எப்படியோ அது வந்துசேர்ந்துவிடும்.

நீரின் கோபம் சமயத்தில் காரணமேயில்லாதது. தன்னைத்தாங்கும் நிலம்மீதே அது தன் கோபத்தை வெள்ளமாகவும் புயல்மழையாகவும் காட்டும். நிலம் பாவம். பொறுமையாய்க் காத்திருக்கும். நீர் அதனைத்தேடி வந்து கலக்கும்போது, உயிர்களெல்லாம் நிலத்தினின்று சிலிர்த்து எழும். ஆனால் அவற்றை ரசிக்கக்கூட மாட்டாமல் நீர் மீண்டும் கடலுக்கோ மலையுச்சிக்கோ சென்றுவிடும். திமிர். ஆணவம். நீருக்கு நிலம் ஒரு பொருட்டே இல்லை. அதற்கு நிலம் என்பது எப்போதுமே இரண்டாம் பட்சம்தான். தன் இச்சைக்கு அதனிடம் இணைந்துவிட்டு பின் அதுபாட்டுக்குப் பறந்துவிடும். பரந்து விரிந்த வானத்துக்கு தான் சொந்தக்காரன் என்ற இறுமாப்பு.
நிலத்தைப் பெண்ணுக்கும் நீரை ஆணுக்கும் உருவகிப்பதில் ஓராயிரம் அர்த்தங்கள் உண்டு.
நீருக்கு “வருண்” என்றும் ஒரு பெயர் உண்டு.
கறந்தபால் கன்னலொடு கலந்த நெய் என்றும் இதைச் சொல்லலாம். அல்லது,
காற்று வெளியிடை என்றும்.

Comments

  1. I ask more discussion about katru veliyidai.

    ReplyDelete


  2. படத்தின் தலைப்பை பார்த்த போதே.......படம் ஒரு கவிதையாக தான் இருக்கும் என்று புரிந்து விட்டது.அருமை
    இதைப்போலவே எனை நோக்கி பாயும் தோட்டா வையும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன். வந்த பாடில்லை
    குறி தவறி விட்டது. இவ்வளவும் இதற்காக தானே

    தொலைதூரம் சென்றாலும்...... தொடுவானம் என்றாலும் நீ.......

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. கக்கூஸ்

                                          நடுச்சாமத்தில கக்கூசுக்கு அவசரமாக வந்துவிட்டால் அது ஒரு மிகப்பெரிய அரசியற் பிரச்சனை. தனியாகப் போகமுடியாது. கூட்டணி வைக்கவேண்டும். செத்துப்போன தாத்தா பின்பத்திக்குள்ளே சுருட்டுப் பிடித்துக்கொண்டு நிப்பார். கிணற்றடியில் பாம்பு பூரான் கிடக்கலாம். ஒரே வழி, பக்கத்தில் நித்திரை கொள்ளும் அம்மாவைத் தட்டி எழுப்புவதுதான். முதல் தட்டிலேயே எழுந்துவிடுவார். “பத்து வயசாயிட்டுது இன்னும் என்னடா பயம்?”