Skip to main content

விளமீன் சிறுகதை பற்றி வைதேகி

விளமீன் - ஜே.கே (புதியசொல், ஏப்ரல்- ஜூன் 17)

"வீ ஓல்மொஸ்ட் கோயிங் டு த்ரோ இட். நோ வன் பை இட்"

என்ற நிலையில் இருந்த அந்த விளமீன் கடைசியில் சரசுமாமியின் கைப்பக்குவத்தில் குழம்பாகி ஜென்ம சாபல்யம் அடைந்தது என்பது தான் கதையின் பிரதான குறியீடு.

கதை முழுவதுமே குறியீடாகத் தான் நகர்கின்றது. ஒவ்வொரு மீனையும் ஒவ்வொரு பக்குவத்தில் சமைத்து, சமைத்ததை ரசித்து ருசித்து அதுவும் தட்டில் எஞ்சியிருக்கும் கீரை கலந்த குழம்புச் சொதியை அப்படியே கோப்பையோடு உறிஞ்சிக்குடிக்கும் சரசு மாமிக்கு வாய்த்தது விளமீனுக்கும் திரளிக்கும் வித்தியாசம் தெரியாத அற்பாயுள் கணவன். ;)

ஆசையாசையாக தான் சமைத்த ஓராக்குழம்பை கிடங்குவெட்டித் தாட்டுப்போட்டு கத்தரிக்காய்க்குழம்பை வைத்துவிட்டு கணவன் முன்னால் சிரித்தபடி சரசு மாமி நின்ற அந்த ஒரு சம்பவம், தங்களுடைய அடிப்படை ஆசாபாசங்களையே குழிதோண்டி புதைத்து விட்டு கணவனுக்காகவும் சமூகத்துக்காகவும் ஒரு போலி வாழ்வை சிரித்தபடி ஏற்றுக்கொள்ளும் ஒட்டுமொத்த பெண்களின் பிரதிநிதியாக சரசுமாமி தெரிவார்.

பிரெஸ்டன் சந்தையில தற்செயலாக வந்து மாமியின் கண்ணில் அகப்பட்ட விளமீன் தொடக்கி வைக்கும் சரசுமாமியின் இரண்டாவது இன்னிங்ஸை. ;)

முதல் இன்னிங்ஸ் போல இல்லாமல், சரசுமாமி அடிச்சுவிளையாடத் தொடங்குவா இரண்டாவதை 😉😍.

மாமியின் ஸ்லோ அன்ட் ஸ்ரெடியான ப்ரோகிரஸை ஜே.கே அழகாக சொல்லியிருப்பார். மூன்று சரை சீனி போட்டு கப்புச்சீனோ குடிச்ச சரசுமாமி பிறகு சீனியே போடாமல் கப்புச்சீனோ குடிப்பதை அழகான காட்சியாக உருவகித்து ரசிக்க முடிகின்றது.

யாரைப்பற்றியும் கவலைப்படாமல் மாமி தன் பாட்டுக்கு தனக்குப்பிடிச்சதை சுதந்திரமாக செய்யத்தொடங்குவதை செயற்கைத்தனம் கொஞ்சமும் இல்லாமல் இயல்பாகச் சொல்லப்பட்டிருக்கும்.

மீன் சந்தையில் இருந்து வந்த தொலைபேசி அழைப்புக்கு,

"சொறி...மெடம் இஸ் நோ மோர்"

"ஷி பாஸ்ட் எவே எ மன்ந் எகோ"

என்று ராசன் சொல்ல, என்னையுமறியாமல் வெடித்துச் சிரித்து,

"வா...வ் சரசுமாமி யு மேட் இட்" என்று சத்தமாகச் சொல்லிவிட்டேன்.

மனிசி இரண்டாவது இன்னிங்ஸில் சதமடிச்சிட்டுது. ;)

கதையில் தொக்கி நிற்கும் முடிவை வாசகமனது மளமளவென்று ஊகித்து சிருஷ்டிக்கும். நான் ஊகித்ததை எழுதினால், அது இனி கதை வாசிக்கப்போகின்றவர்களுக்கு நான் செய்யும் பாவம். இது என்னுடைய வாசிப்பின் புரிதல். வாசகசாத்தியங்கள் ஆளுக்காள் வேறுபடலாம். Let them decide.

ஏனெனில், ஒரு சிறுகதையின் வடிவம் என்பது எழுதுபவரின் எத்தனமும் வாசிப்பவரின் இயல்பும் இணைந்தே உருவாக்கப்படுகின்றது. So, it's unique.

க்ளிஷே, விரசம், தேவையற்ற அருட்டல்கள் எதுவுமில்லாமல் ஒரு sensitive ஆன கதைக்கருவை விளமீனை வைத்து மணக்க மணக்க குழம்பு வைத்த ஜேகேக்கு மிக்க நன்றி.

A JK story :)

Thanks Jeyakumaran Chandrasegaram

பி.கு: சரசுமாமிக்கும் அந்த சூடானிய "குழந்தைக்கும்" அன்பும் முத்தங்களும் 😍😘😘😘 

- வைதேகி பாலமுரளி

Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. கக்கூஸ்

                                          நடுச்சாமத்தில கக்கூசுக்கு அவசரமாக வந்துவிட்டால் அது ஒரு மிகப்பெரிய அரசியற் பிரச்சனை. தனியாகப் போகமுடியாது. கூட்டணி வைக்கவேண்டும். செத்துப்போன தாத்தா பின்பத்திக்குள்ளே சுருட்டுப் பிடித்துக்கொண்டு நிப்பார். கிணற்றடியில் பாம்பு பூரான் கிடக்கலாம். ஒரே வழி, பக்கத்தில் நித்திரை கொள்ளும் அம்மாவைத் தட்டி எழுப்புவதுதான். முதல் தட்டிலேயே எழுந்துவிடுவார். “பத்து வயசாயிட்டுது இன்னும் என்னடா பயம்?”