Skip to main content

சிறப்பான தரமான சம்பவங்கள் மூன்று



சிறப்பான தரமான சம்பவங்கள் மூன்று.

சம்பவம் ஒன்று

‘பேட்ட’ ட்றெயிலரை அம்மாவிடமும் அப்பாவிடமும் போட்டுக்காட்டினேன்.
‘இந்த எடுப்பையும் நடப்பையும் வச்சு இவ்வளவு காலமும் இவன் விளையாடிட்டான், வீரன்தான்’, இது அப்பா.
‘நல்லாத்தான் இருக்கு … ஆனால் இந்தாள் உளறினதை எல்லாம் கேட்டாப்பிறகு இதைப்பார்க்க விசர் வருகுது’, இது அம்மா.
‘என்ன இப்டி சொல்லுறிங்கள், வெறும்படம்தானே, வடிவேலுவும்தான் அரசியல்ல உளறிக்கொண்டு திரிஞ்சுது, ஆனாலும் அந்தாளிண்ட கொமடியை நாங்கள் ரசிக்கிறதில்லையா?’
‘அது வடிவேலுடா … இது ரஜினிகாந்த் .. இவர் நடிப்பையும் அரசியலையும் போட்டுக் குழப்புறதாலதான் நாங்களும் குழம்பவேண்டியிருக்கு’, இது அம்மா.
‘விடு, அவன் தமிழ்நாட்டு அரசியலுக்கு வந்தென்ன, வராட்டியென்ன, அவங்கள் மட்டும் எங்கட சுமந்திரன், கஜா பற்றி பேசி அடிபட்டுக்கொண்டா இருக்கிறாங்கள்? நம்மளுக்கு படம் பிடிச்சா ரசிக்கலாம், இல்லாட்டி விட்டிட்டு சோலியை பார்க்கலாம்… அவங்கட அரசியல் அவங்களோட’ — அப்பா மீண்டும்.
இவ்வளத்தையும் கேட்டுக்கொண்டிருந்த அப்பாவின் சீனியர் சிட்டிசன் கிளப் அங்கிள் கேட்டார்.
‘எல்லாஞ்சரி …. ஆனா படத்துக்கேன் “பெட்டை” என்று பெயர் வச்சாங்கள்?’

சம்பவம் இரண்டு

அக்காவின் மகன், பத்து வயது, ட்றெயிலர் பார்த்தான்.
‘ஹாவ் இஸ் இட்?’
‘…இட்ஸ் ஓகே … இஸ் இட் லைக் விஜய் சேதுபதி மூவி?’
‘நோ நோ … ஹி இஸ் ஜஸ்ட் அ வில்லன்’
‘ஓ … தென் தட் ஓல்ட் கைஸ் மூவி’
‘நோ ஹனி … இட்ஸ் நொட் த அஜித் மூவி …. இட்ஸ் ரஜினிகாந்த்’
‘வட் எவர் … ஐ டோண்ட் லைக் ஹிம் … ஐ லைக் விஜய் மூவிஸ் … ஹி கான் … லைக் பைஃட் ஓல் தீஸ் ஓல்ட் போஃல்க்ஸ் எலோன்’
சீமான் ஒரு சிரி சிரிச்சான். என்னா நக்கல்டா.

சம்பவம் மூன்று

கஜனிடமிருந்து வைபர் மெஸெஜ்.
‘மச்சி, தல பின்னியிருக்காப்ள, அப்டியே தளபதி மாஸ். 2 hours 50 mins full on package.’ 
‘அவ்ளோ நேரம் நம்ம தல தாங்குமாடா?’ 
‘நம்பிக்கைதான் வாழ்க்கை.. 90ஸ் தலைவரை திருப்பிக் கொண்டந்துட்டாங்கள்.. அதுபோதும்.. என்ன ஒண்டு, சிம்ரனோடை சேர்த்து ஷோபனாவையும் போட்டிருந்தா நல்லா இருந்திருக்கும்!’ 
‘ஏண்டா மூதேவி… அப்டியே படாபட்டையும் சேர்த்துக்கேளேன்’ 
‘இல்ல மச்சி … கடைசி நாலைஞ்சு படங்களில தலையை வச்சு பாப்பிள்ளை விளையாட்டு விளையாடீட்டாங்கள். நான் கடுப்பில இருக்கிறன் … இதிலயாவது அந்தாளை உயிரோட நடக்கவிடுவாங்கள் எண்டு நினைக்கிறன்… பழைய ரஜினியை இனிப்பார்க்கலாம்’ 
‘அங்கதாண்டா பிரச்சனையே… எங்களுக்கு எப்பவுமே பழசுமாதிரி வேண்டும். அந்தக்கால யாழ்ப்பாணம், அந்தக்கால நட்புவட்டாரம், பாடசாலை ரீயூனியன், சிம்ரன், மதுபாலா, அந்தக்கால சுண்டுக்குளி வேம்படி, அந்தக்கால இளையராஜா, அந்தக்கால ரகுமான், எட்செற்றா எட்செற்றா. எப்பவுமே எமக்கு ரஜினியிடமிருந்து இன்னொரு பாஷா வேணும். ஆனா பாஷா வெளிவரேக்க பிறந்த குழந்தைக்கு இப்ப இருபத்துநாலு வயது. அதை நாங்கள் மறந்திட்டம். ரஜினிண்ட மிகப்பெரிய தோல்வியே அதுதான் … இரண்டாயிரங்களுக்குப்பிறகு ரஜினிக்கென்று ஒரு பரிமாணம் அமையாமலேயே போயிட்டுது ... கிளிண்ட் ஈஸ்ட்வுட்டை பாரு, எழுபதுகளில் டேர்ட்டி ஹரி நடிச்ச ஆள்தான் இரண்டாயிரத்தில மில்லியன் டொலர் பேபி நடிச்சுது. ஷோலே நடிச்ச அமிதாப்தான் கிட்டடில ‘பிகு’ நடிச்சது … அந்த ட்றான்ஸ்போர்மேஷன் நம்ம தலக்கு மிஸ்ஸிங் …’ 
'நீ உந்த பேக்கதைகளை படலையோட வச்சிரு … நமக்குத் தலைவர் படம் …சின்னதா ஒரு ஸ்டைல், நடை, தலைவியோட ஒரு வெருளல், அப்டியே ஒரு ரொமான்ஸ், அடிபாட்டில வேறெங்கையோ பார்த்துக்கொண்டு வில்லன் மூஞ்சில விடுறது, பாம்பைக் கண்டு பயப்பிடுறது … அவ்வளவும் போதும்... நீ பெரிய இவன்மாதிரி கதைக்காம அம்மிகொண்டு இரு. காலமை எழும்பினா ஆரெண்டாலும் கக்கூஸ் போகத்தான் வேணும்’ 
‘அதை ஏன் இப்ப எனக்கு சொல்லுறாய்? சரி விடு … நீங்களெல்லாம் திருந்தப்போறதில்லை… என்னவோ பண்ணுங்கடா ’ 
‘வெயிட் மச்சி, இவ்வளவு கதைக்கிறாய் .. நீ படம் பாக்கமாட்டியா?’ 
‘மசிரை விட்டான் சிங்கன்!’
000 

Comments

  1. தலைப்புவைக்க ரஜினி தான் தேவைப்பட்டார் ... பழுத்த மரம் தான் கல்லடி படும் இப்படியே எழுதிக்கிட்டு இருங்க

    ReplyDelete
  2. நாங்கள் பிள்ளையை கிள்ளுவோம் ।தொட்டிலை ஆட்ட பலர் இருக்கிறாங்க பாஸ் /கவலையே படாதீங்க

    வெயிட் மச்சி, இவ்வளவு கதைக்கிறாய் .. நீ படம் பாக்கமாட்டியா?’
    பதில் தந்திட்டமல்ல

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

லெ. முருகபூபதி

பெருமதிப்புக்கும் பேரன்புக்குமுரிய லெ. முருகபூபதியைப்பற்றி முன்னமும் பலமுறை எழுதியும் பேசியுமிருக்கிறேன். எழுத்தை என்னுடைய இரண்டாவது துறையாகத் தேர்ந்தெடுத்த காலத்திலிருந்து என்னிடத்தில் அன்பும் பரிவும் காட்டிவரும் மூத்தவர் அவர். ஜெயமோகன் தன்னுடைய இணையத்தளத்தில் ‘புல்வெளி தேசம்’ தொடரை எழுதிய நாட்களில்தான் எனக்கு முருகபூபதியின் பெயர் பரிச்சயத்துக்கு வந்தது. பின்னர் அவுஸ்திரேலியாவுக்குக் குடிவந்த புதிதில் நானும் கேதாவும் சேர்ந்து கேசி தமிழ் மன்ற நிகழ்வொன்றில் ‘குற்றவாளிக் கூண்டில் நல்லூர் முருகன்’ என்றொரு வழக்காடு மன்றம் செய்திருந்தோம். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த முருகபூபதி ‘நீங்கள் கொஞ்சம் விவகாரமான ஆட்களாத் தெரியுது’ என்று தேடிவந்து தன்னை அறிமுகப்படுத்தினார். அப்போது ஜீவநதி சஞ்சிகை அவுஸ்திரேலியச் சிறப்பிதழ் வெளியிடுவதாகவும் அதற்கு ஒரு சிறுகதை எழுதித்தரமுடியுமா என்றும் அவர் கேட்டார். அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு இலக்கிய நிகழ்வுகளுக்கு வரும்படி அழைப்பெடுத்துச் சொல்வார். ஒருமுறை அவரோடு சேர்ந்து சிட்னிவரை ஒரு கூட்டத்துக்குச் சென்று திரும்பினோம். அவருடைய பல புத்தக வெளியீடுகளில் உரையாற்ற...