ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித் தரைக்குப் பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...
தண்ணி கொதிக்கும் வரை நிறைய வேலை செய்யலாம் என்று பல பாத்திரங்களை கழுவி ஊத்தியிருக்கிறியள் போல.
ReplyDeleteயார் இந்த கிஷோகர் என்று கடுப்பாகினாலும் ஒரு குறுநாவலுக்கான மூலக்கருவாகும் அளவுக்கு ட்ரெண்ட்ல இருக்கிறாப்ல.
மறைமுகமாக இல்லாமல் நேரடியாகவே நீங்கள் களத்தில் இறங்கி பலரை இழுத்துள்ளதால் நாம் எங்கு கால் வைத்தாலும் கிளைமோர் வெடிக்கும் என்ற பயத்தால் அதிகம் எழுத முடியவில்லை.
அப்புறம்... பேசாம தேத்தண்ணியை போட்டுகொண்டு கொ பு கா வை எழுதி முடியுங்கோ.
இதை எல்லாம் வாசிப்பதற்கா பிறந்திளைத்தேன் எம்பெருமான்.