Skip to main content

"சமாதானத்தின் கதை" பற்றி தாரணி பாஸ்கரன்



ஜேகே ஐ பற்றி நான் தெரிஞ்சுகொண்டது கந்தசாமியும் கலக்சியும் வந்த timeலதான் . Fbல யாரோ பகிர்ந்த போஸ்ட் பார்த்து impress ஆகி படலைக்கு போய் இன்னும் நிறைய தெரிஞ்சு fbல friend request குடுத்து அதை அவர் accept பண்ணி ஆச்சரியங்களிலே காலம் கடந்தது. ஜேகேயின் எழுத்துக்கள் தன்னை நோக்கி மெல்ல மெல்ல என்னை இழுக்கத்தொடங்கியிருந்தது என்னையறியாமலே.

எழுத்துக்கள் பற்றி கதைப்பதறகு எனக்கென்ன தகுதியிருக்கிறது, ஒரு நூறு புத்தகங்களையேனும் வாசித்து கடந்திருக்கிறேனா என எண்ணி பார்ப்பேன். அடுத்த கணமே யாரவது வந்து இலக்கியம் பற்றி என்ன தெரியும் என்றால் இப்போது தான் ஒரு கடைநிலை வாசிப்பாளனாக உருவாகிக் கொண்டிருக்கிறேன். ஜேகேயின் வாத்தியார் சுஜாதா என்பதற்காய் சுஜாதாவை இன்னும் ஆழமாக வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன் . நீண்ட காத்திருப்பு ஜேகேயின் review காகவே தேடிப்பிடித்து வாசித்திருக்கிறேன். சமாதானத்தின் கதையை ஆதிரை வெளியிட்டதாலேயே ஆறாவடு வாசித்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் வாசித்திருக்கிறேன் நேற்றிலிருந்து கடல்புறா வாசிப்பதும் உறுதியாகிவிட்டது. இன்னும் ஆங்கில நூல்களையும் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் துளிர்த்துள்ளது . ஆக எனக்கு புத்தகங்களையும் ஆசிரியர்களையும் அறிமுகப்படுத்துவது ஜேகேயின் எழுத்துக்கள்தான்.

சமாதானத்தின் கதை இது தான் நான் முதல் வாசித்த ஜேகேயின் தொகுப்பு. ஒவ்வொரு கதையும் எனக்குள்ள ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்திச்சு. ஒன்றிரண்டு நாளில வாசிச்சு முடிக்கிற சிறுகதைத்தொகுப்பில்லை. அவ்வளவு கனதி. விசையறு பந்து என்னை போட்டு தாக்கிச்சு. அன்றாடம் நிறைய இடங்களில அது புழு அப்பிடித்தானிருக்கும்னு ஆறுதல் தந்தது அது. ஒரு படைப்பு வாசித்து பல நாட்கள் கழிந்த பின்னரும் வாசகனோடு வாழச்செய்வதென்பது எவ்வளவு பெரிய விடயம் ??

சமாதானத்தின் கதை கலந்துரையாடலை யாழ்ப்பாணத்தில் வெண்பா ஒழுங்கமைத்திருந்தது. எப்படியாவது போய் ஜேகேயை பார்த்தாக வேண்டுமென முடிவெடுத்தாச்சு. புத்தக வெளியீட்டிலோ கலந்துரையாடலிலோ பங்குபற்றிய முன்னனுபவம் இல்லை. என் நட்பு வட்டத்தில் புத்தகம் வாசிக்கிற நண்பியான வராகினிக்கு call பண்ணி போவமா எண்டன் வேற அலுவலா நிக்கிறதால வரமுடியல எண்டு பதில் வந்தது. தனிய எப்பிடி போறது போகாட்டிக்கு ஜேகேயை எப்பிடி பாக்கிறது? புத்தகத்தை அப்பிடி வாசிச்சிருக்கன். மற்றவர்கள் எப்பிடி புத்தக அனுபவம் பகிர்ந்துகொள்ளுவார்கள் என்பதையறியவும் ஆவல் இல்லாமலில்லை. அதைவிட கவுதமி என்னோட வன்னியிலே ஒண்டாபடிச்சிருக்கிறா வேற. இப்பிடி எல்லாம் சேர்த்து 30நிமிஷம் சரியா இருக்க வீட்டில இருந்து என்னை கிளம்பவச்சது . சாவகச்சேரில இருந்து ஓரளவு இல்ல speedஆ போன தான் யாழ்ப்பாணம் 4கு போக முடியும். 4.10அப்பிடி இருக்கும் நான் குவிமாடக் கேட்போர் கூடத்தில நுழையேக்க. Bike ல செல்லும்போதே வித்தியாசமான உணர்வா இருந்திச்சு.எனக்கு பிடிச்ச மற்றும் நான் சந்திக்கப்போற முதல் எழுத்தாளர் என்ற பிரமிப்புணர்வு என்னை ஆக்கிரமித்திருந்தது . நேரமுகாமைத்துவம் இல்லை நாலு மணிக்கெண்டால் 3.55காவது நிக்க வேண்டாமோ என்ற படபடப்பும் இருந்தது.

உள்ளே சென்று இடைவரிசையில் அமர்ந்து கொண்டேன். நிகழ்வு தொடங்கவில்லை. முன் வரிசையில் பேச்சாளர்கள் அமர்ந்து கதைத்துக்கொண்டிருந்தனர். பேச்சாயத்தமாய் இருக்கலாம் .
ஜேகே தெரிந்தவர்களுடன் கை குடுத்து கதைத்துக் கொண்டிருந்தார். பிறகு எழும்பி வந்து மதிசுதா அண்ணாவோடு கதைத்துக்கொண்ட்டிருந்தார். கவுதமி முதல் வரிசை கதிரையிலிருந்து திரும்பி பார்த்து புன்னகைத்தார். எனக்கு fbல பாத்து நீதுஜன் அண்ணாவையும் வைதேகி அக்காவையும் தெரிந்திருந்தது. (முகத்தை அடையாளம் கண்டுகொள்ள தெரியும்.) சிறிது நேரத்தில் நிகழ்வு ஆரம்பித்தது. பேச்சாளர்கள் பேசத்தொடங்கினார்கள். நான் கவனமாக கேட்டுக்கொண்டிருந்தேன் .இன்னும் ஆழமாக ஒவ்வொரு சிறுகதைகளையும் தொட்டிருக்கலாமோ என்ற ஏக்கம் எழாமலில்லை. ஜேகே யின் உரை சுருக்கமாக இருந்தது. கலந்துரையாடல் நேரம் என சுதர்சன் அண்ணா அறிவித்தபோதே இருட்டியிருந்தது. வவுனியால இருந்து வந்த ஒரு அக்கா விசையறு பந்து பற்றி அது ஏற்படுத்தின தாக்கம் பற்றி அருமையா சொன்னா. ஒரு அண்ணா மன்னர்ல இருந்து சாப்பிடாம வந்திருந்தார் எண்டு சொன்னார். ஜேகேயின் எழுத்துக்களுக்கு பசி பொறுத்துக்கொள்ற சக்தி இருக்குனு மனசுக்குள்ள நினைச்சுக்கொண்டன் .

உவமைகள் பற்றிய கருத்து வர உமாஜி உவமைகள் இருந்தா ஜேகேயின் எழுத்துக்களை புறக்கணிப்பேன் எண்டது தூக்கிவாரிப்போட்டுது ஏனெனில் ஜேகேயின் உவமைகள்னு நான் ஒரு சின்ன noteல எழுதிவச்சிருக்கிறனான் வாசிக்கேக்க. ஜேகே உவமைகளை கையாளுற விதம் எனக்கு அவ்ளோ பிடிக்கும். விளைமீனில செதில் பறக்கிற போல சரசுமாமியின்ர நினைவுகள் பறக்குதுனு சொல்லியிருப்பார் இன்னும் நிறைய. (பிறகு ஒருநாள் உமாஜி ஏன் உவமையை வெறுக்கிறார்னு postஒண்டில பார்த்து தெரிஞ்சு கொண்டன். இருந்தும் பொருத்தமில்லாத உவமையை ஜேகே பாவிப்பார்னு எப்பிடி நினைக்கலாம் னு ஆதங்கப்பட்டுமிருக்கிறன்). இன்னும் சில காரசாரமான கருத்துக்கள். இலக்கிய சந்திப்புக்கள் இப்பிடி தான் இருக்கும்னு நினைச்சுக்கொண்டன். ஒருமாதிரி கலந்துரையாடல்கள் நிறைவுக்கு வந்திச்சு.

நான் bagல இருந்த சமாதானத்தின் கதை புத்தகத்தை எடுத்துக்கொண்டு ஜேகே கிட்ட போனன். நான் தாரணி .பஸ்ல போகேக்க யாரும disturb பண்ணினா கூட அது புழு அப்பிடி தான் behave பண்ணும் என்றளவுக்கு நினைக்க வச்சிருக்கிறீங்க என்று என்னை அறிமுகப்படுத்தினதா ஞாபகம். அண்ணா sign வச்சு தரணும் எண்டு சொல்லி புத்தக பின்பக்கத்த நீட்டினன் .சுஜாதா சொல்லியிருக்குறார்னு நான் புக் வாங்கின உடன மேல் மூலைல என்ர பெயரையும் வாங்கின திகதியையும் எழுதுறத பழக்கமாக்கியிருந்தன்.

என்ன எழுதுறது என கேட்டுக்கொண்டு பின் மட்டைல எழுதினா கிளிஞ்சிரும் அதான் பாக்கிறேன். ( mindvoice னு நினைச்சிட்டு பெருசா சொல்லியிருப்பனோன்னு doubt ஆ இருக்கு "நான் அவ்ளோ கவனமா வச்சிருப்பன"்) முன்னுக்கு திருப்பி நீங்க எழுதிடீங்க பெயர் எண்டிட்டு விளமீன் முடியிறதுக்கு கீழ என்ன பெயர் எண்டு மீண்டும் உறுதிப்படுத்திட்டு இப்பிடி எழுதிக் கொடுத்தார் " அன்புள்ள தாராணிக்கு அன்புடன் ஜேகே கீழ திகதி". என் வாழ்க்கையின் மகிழ்வான நாட்களில் மறக்கமுடியாத தினமன்று.



ஜேகேயின் எழுத்துக்கள் எல்லா வயதினரையும் சென்றடையும் என்பதில் ஐயமில்லை. கொல்லைப்புறத்து காதலிகள் வாசிக்கும்போது கடவுளை எடுத்து 50's kid ஒருவரிடம் கொடுத்தேன். முகம் முழுக்க பூரிப்போடு வாசித்து முடித்தார். நாங்கள் எப்பிடியொரு வாழ்க்கையை யுத்தகாலத்தில் வாழ்ந்தோம்னு யாரும் ஒரு பதினைந்து வருடத்துக்கு பிறகு என்னிடம் கேட்டால் கொடுப்பதற்காக பத்திரப்படுத்தியுள்ள நூல் அது.

ஜேகே ஒரு வாசகரிடம் எதிர்பார்க்கின்ற குறைந்த பட்ச புத்திசாலித்தனம் இருப்பதாகவே உணர்கிறேன் . ஜேகேயின் எழுத்துக்கள் தான் எனக்கு ஜேகேயை அறிமுகப்படுத்துகிறது . பெயருக்காக நான் ஒருபோதும் எழுத்துக்களை வாசித்ததில்லை. கொண்டாடியதுமில்லை. அனால் ஜேகே கொண்டாடப்பட வேண்டிய ஆத்மார்த்தமான கதைசொல்லி என்பதில் சந்தேகமில்லை.

"என் கொல்லைப்புறத்துக்காதலிகள்" என்னோட versionல "சோ ஸ்வீட் சுஜாதா" போல டிபிக்கல் ஜேகே நாடிக்கு கை கொடுத்து கொடுப்புக்குள்ள லைட்டா சிரிச்சு கொண்டிருப்பார்.

-- தாரணி பாஸ்கரன்

Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

லெ. முருகபூபதி

பெருமதிப்புக்கும் பேரன்புக்குமுரிய லெ. முருகபூபதியைப்பற்றி முன்னமும் பலமுறை எழுதியும் பேசியுமிருக்கிறேன். எழுத்தை என்னுடைய இரண்டாவது துறையாகத் தேர்ந்தெடுத்த காலத்திலிருந்து என்னிடத்தில் அன்பும் பரிவும் காட்டிவரும் மூத்தவர் அவர். ஜெயமோகன் தன்னுடைய இணையத்தளத்தில் ‘புல்வெளி தேசம்’ தொடரை எழுதிய நாட்களில்தான் எனக்கு முருகபூபதியின் பெயர் பரிச்சயத்துக்கு வந்தது. பின்னர் அவுஸ்திரேலியாவுக்குக் குடிவந்த புதிதில் நானும் கேதாவும் சேர்ந்து கேசி தமிழ் மன்ற நிகழ்வொன்றில் ‘குற்றவாளிக் கூண்டில் நல்லூர் முருகன்’ என்றொரு வழக்காடு மன்றம் செய்திருந்தோம். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த முருகபூபதி ‘நீங்கள் கொஞ்சம் விவகாரமான ஆட்களாத் தெரியுது’ என்று தேடிவந்து தன்னை அறிமுகப்படுத்தினார். அப்போது ஜீவநதி சஞ்சிகை அவுஸ்திரேலியச் சிறப்பிதழ் வெளியிடுவதாகவும் அதற்கு ஒரு சிறுகதை எழுதித்தரமுடியுமா என்றும் அவர் கேட்டார். அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு இலக்கிய நிகழ்வுகளுக்கு வரும்படி அழைப்பெடுத்துச் சொல்வார். ஒருமுறை அவரோடு சேர்ந்து சிட்னிவரை ஒரு கூட்டத்துக்குச் சென்று திரும்பினோம். அவருடைய பல புத்தக வெளியீடுகளில் உரையாற்ற...